பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


தேவர் அடி பொருந்த மாட்டார் என்றதால் அம்மையார் அடி பொருந்தியவர் என்பது தானே தெளிவாகும்.

இறைவன் எப்போதும் வேதத்தைச் சொல்கிறவன்; அதனால் அவன் அநாதி வேதியன்; வேதியா வேத கீதா' என்பது தேவாரம். என்கின்றேற்கு - என்று வாழ்த்தும் எனக்கு. என் செய்வான் கொல்லோ: கொல்லும் ஓவும் அசைநிலைகள், இனி-இனிமேல்.

இறைவன் அடி உள்ளத்திற் பொருந்த அன்பு செய்கிறவர்களுக்கு அருள்பவன் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 15-ஆம் பாட்டு.