பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

இப்போது விழிப்பு நிலையில் இருக்கிறார். விமானம் தரைக்கு வந்து விட்டது. ஆனால் விமானத்தில் பறக்கிறது போன்ற உணர்ச்சி இன்னும் மறையவில்லை. இங்கு, இந்தநிலையிலும் அந்தச் சுடர் உருவம் உள்ளே சுழல்கிறது.

இதுஅன்றே ஈசன் திருவுருவம் ஆமாறு:

இது அன்றே என்றனக் கோர் சேமம்—இது அன்றே

மின்னும் சுடர்உருவாய் மீண்டு ஆய்என் சிந்தனைக்கே

இன்னும் சுடர்கின்றது இங்கு.

[இந்தச் சோதி வடிவம் அல்லவா இறைவனுடைய திருவுருவம் ஆகும் வண்ணம்? இது அல்லவா எனக்கு ஒரு பாதுகாப்பான இடம்? அனுபவத்தை மீண்டும் எண்ணிப் பார்க்கின்ற என் சிந்தனையில், மின்னுகின்ற சோதி வடிவாகி இன்னும், இந்த விழிப்பு நிலையிலும், சுழன்று கொண்டிருக்கிறது.]

விழிப்பு நிலைக்கு வந்ததும் அந்தச் சோதி தரிசனத்தின் உறைப்பு உள்ளத்துள்ளே இருக்கும் அதிசயத்தை இந்தப் பாட்டில் சொல்கிறார். இதுவன்றோ என்றனக்கோர் சேமம்’ என்பதற்கு, 'இந்தச் சுடர் உருவமல்லவா எனக்குச் சேமிக்கும் பொருள்?' என்றும் பொருள் சொல்லலாம். மனத்துக்குள்ளே பொதிந்து வைத்தலால் சேமம்' என்றார். "மீண்டாய்' என்று இறைவனை நோக்கிச் சொல்வதாகக் கொண்டால், முன்னே, 'ஈசன்’ என்று படர்க்கையிலே சொன்னதோடு இயையாது. ஆகவே, 'மீண்டு ஆய்” என்று பிரித்து, முன் பெற்ற அனுபவத்தை மீண்டும் எண்ணிப்