பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



238


பயந்து இருளானது இங்கே வந்து இந்த இடத்தைப் பற்றிக் கொண்டு இங்கேயே தங்கியிருக்கிறதைப்போல இருக்கும்.

மறு ஒக்கும் என்று கூட்டுக. அடும்—அழித்துவிடும். கண்டாய் - அசை. பேழ்வாய் - ஆழமான வாய். அசைத்தான் -கட்டியவன். மிடற்றின் உள்ள மணி போன்ற மறு.]

அம்மையார் இறைவனை நெருங்கிக் கண்டு அவன் எழில் நலத்தை அநுபவிக்கும் பாங்கில் அமைந்தது இந்தப் பாட்டு.

இது அற்புதத் திருவந்தாதியில் 35-ஆம் பாடல்.