பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

அணைக்காதபடி பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அந்தப் பாதுகாப்பை இனிச் சொல்ல வருகிறார்.

இறைவனை எண்ணாதவர்களோடு சேர்வதை விலக்க வேண்டும். அவர்களோடு சேர்வதால் மறுபடியும் மனம் அவர்கள் போகும் வழியைச் சார நினைக்கும். குடத்தில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது ஒட்டையுடையதாக இருந்தால் அதன் வழியே போய்விடும்; குடத்தை நிரப்ப இயலாது. ஆகவே, அஸாதுக்களுடை சங்கத்தைச் சேராமல் இருக்கவேண்டும். இறைவனை எண்ணாதவர்களுடைய கூட்டத்தினின்றும் விலகி நிற்கவேண்டும். நெஞ்சுக்கு இந்த உபதேசத்தை அம்மையார் சொல்கிறார்.

உள்ளாதார் கூட்டம் ஒருவு

உள்ளாதார் — எண்ணாதவர்கள். யாரை எண்ணாதவர்கள்? இறைவனை எண்ணாதவர்கள். இங்கே இறைவளைப் பற்றிச் சொல்கிறார்.

சிவபெருமான் தனக்கெனச் சிறப்பான சில அடையாளங்களை உடையவன். சந்திரன் தக்கனுடைய சாபத்தால் தேய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருள்புரிந்து பிறையைத் தன் திருமுடியில் தரித்துத் தேயாமலும் வளராமலும் இருக்கச் செய்தான். இறைவனுடைய திருமுடியில் அந்தப்பிறை சிறிய கண்ணிபோல விளங்குகிறது. வேறு யாரும் சந்திரனைக் காப்பாற்றவில்லை. அவன் இன்னலை எண்ணி யாரும் அவனை ஏற்கவில்லை. இறைவனே அவனை ஏற்றுக்கொண்டு குறுங்கண்ணி போலத் திருமுடி மேல் வைத்துக்கொண்டான்.


குறித்துஒருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்.

என்று சிவபெருமான இனம் காட்டுகிறார். அடைக்கலம் புகுந்தவரை ஆட்கொள்ளும் பெருமான் அவன். அவனிடத்