பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255

தில் உள்ளத்தை வைத்து எண்ணாதவர் கூட்டத்தை நீங்குவாயாக’ என்று நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். துஸ்ஸங்கத்தைச் சேராமல் இருக்கவேண்டும் என்பதைப் பிற அருளாளர்களும் வற்புறுத்துகிறார்கள்.

"திருவே, வெருவிப்
பிறிந்தேன் நினது பெருமைஎண் ணாத
கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நர குக்குற வாய
மனிதரையே”

என்று அபிராம பட்டர் அம்பிகையினிடம் சொல்கிறார். துஸ்ஸங்கத்தைக் கண்டு பயந்து பிரிந்து விட்டாராம்.

ஆகவே, இறையருள் பெறும் நெறியில் போகப் புகுந்தவர்களுக்கு இன்றியமையாத வலிமை, நல்லோர் இணக்கம், தளர்ச்சியின்றி அந்த நெறியிற் செல்லப் பாதுகாப்பாக இருப்பது அல்லாதார் கூட்டத்தினின்றும் விலகியிருத்தல்.


மறித்தும் மடநெஞ்சே, வாயாலும் சொல்லிக்
தொழு தொண்டர் பாதாம்: — குறித்து ஒருவர்குறித்துத்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
உள்ளாதார் கூட்டம் ஒருவு


[அறியாமையையுடைய நெஞ்சே, இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி யாரும் ஏற்றுக் கொள்ளாத சந்திரனைக் குறுங்கண்ணியாகத் திருமுடியிலே வைத்துக் கொண்டவரை மீட்டும் வாயினாலும் புகழ்பாடித் தியானித்து, அவருடைய தொண்டர்களின் திருவடிகளைத் தொழுவாயாக; அவரை எண்ணாதவர்களின் கூட்டத்தினின்று நீ விலகி ஒழுகுவாயாக.

மறித்தும்-மீட்டும்; வாயாலும் என்று சொன்னது நெஞ்சால் நினைப்பதற்கு மேலும் என்னும் பொருளுடையது;