பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. எல்லாம் அருளே


இறைவனுடைய திருவருள் பெற்றவர்கள் எல்லா வகையான நன்மைகளையும் பெறுவார்கள். "இம்மை யேதரும் சோறும் கூறையும், ஏத்தலாம்; இடர் கெடலும் ஆம், அம்மையேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே” என்பார் சுந்தர மூர்த்தி நாயனார். இம்மை மறுமை, வீடு என்று மூன்று நிலை, இந்த உலகவாழ்வு இம்மை; அதிலும் எல்லாப் போகங்களையும் பெறலாம்; மறுமை எனபது இப்பிறவியின் பின் வரும் வாழ்வு; அப்போது சொர்க்க போகம் பெறலாம். அதற்குமேல் முத்தி யின்பத்தைப் பெறலாம்.

இறைவன் அருள் இருந்தால் இந்த உலகத்தை ஆளும் மன்னவனாக இருக்கலாம்; பிறகு தேவருலகத்தை ஆளும் இந்திரனாகலாம்; பிரமலோகம் முதலியவற்றை ஆளும் பதவிகளும் கிடைக்கும். எல்லா உலகங்களையும் ஆளும்படி செய்வது இறைவன் திருவருள்.

"அருளே உலகெலாம் ஆள்விப்பது.”

இகலோகத் தலைமையையும் பிறலோகத் தலைமையையும் தரும் அந்த அருள் பிறகு பிறப்பை அறுத்து மோட்சப் பதவியைத் தரும்.

“ஈசன்
அருளே பிறப்பறுப்பது.”

உலகத்தில் இறைவன் திருவருளைப் பெற எண்ணுகிறவர்கள் இரண்டு வகையினர். ஒருவகையினர் பதவியை