நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 7;
அதனைப் போலவே, மார்க்சிசமும்-உலகம் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும், படிப்படியாக மனிதகுலம் எவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கக் கூடும் என்பன போன்ற எல்லா கருத்துக்கனையும்- கதங்களைப் போலவே மார்க்சிசமும் தோடுகின்றது. மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது:
- மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான். மதம் மனிதனை உண்டுபண்ணவில்லை. மதம் என்பது ஒடுக்கப் பட்ட ஒரு பிரயாணியின் புலம்பல்; மனமில்லாத ஒர் உலகத்தின் உணர்ச்சி, உயிரில்லாத நிலைமைகளின் உயிரி. அது மக்களுக்கு அபினி. மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்ப தாகப் பிரமை காட்டுகிற மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கேர்ருவது, மக்களுடைய உண்மையான மகிழ்ச்சி யைக் கோருவதாகும், என்கிறார்.
மார்க்சியவாதிகள் மதத்திற்கு விரோதமான கருத்தையே கொண்டிருக்கிறார்கள். மதத்தை ஒரு ஏமாற்றுக் கருவியாகவே கருதுகிறார்கள். இந்த விரோத மனப்பான்மைக்குக் காரணம் மதத்தின் பெயரால் கரன் டலும், ஒரு முதலாளித்துவ மனப்பான்மையினையும் மதம் ஏற்படுத்துகின்றது.
உழைப்பாளிகளை மதம் சுரண்டுகிறது; வறுமை ஒரு மகத்துவம் கொடுத்துப் பேசுகிறது; ஏழைகளுக்கு மோட்ச சாம்ராஜ்ஜியத்தில் நிரந்தரமான ஒரிடம் இருக்கிறது என்று கூறுவதும் சொத்துடையவர்களின் சூழ்ச்சிகளே:
உழைப்பாளிகள் தங்களது அடிமை வாழ்க்கையிலே ஒருவித திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக,
தங்களது அடிம்ை நிலையை உணராதிருக்க, மதம் ஒரு கருவியாக உள்ளது.
மதங்கிள் என்ன போதிக்கின்றன: அடிமைத்தனத்தின் வேனித் தோற்றங்க ைகிய அடக்கம், நிதானம்