பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

காற்றில் வந்த கவிதை

ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும்.கிளி ஆகாயம் பறக்கவே

ஆகாயம் பறக்கும் கிளி ஏகாந்தம் பேசவே
மூன்று கல்லு வீசவே மூன்று கல்லும் சோரவே
மூன்ரு லாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளி பாடவே
ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும் கிளி ஆகாயம் பறக்கவே
ஆகாயம் பறக்கும்கிளி ஏகாந்தம் பேசவே

இப்படியே பாட்டுத் தொடருகின்றது. பாட்டு ஒரே மாதிரியாக இருந்தாலும் கும்மியடிக்கிற வேகம் அதிகரித்துக் கொண்டே போகும். கிளிகளைப்போல் பறந்து பறந்து கும்மியடிப்பார்கள்.

பனைமரத்திலே ஏறி ஒலை வெட்டுவதும், பனை மட்டையிலிருந்து நார் உரிப்பதும் சுலபமான வேலைகள் அல்ல. அப்படிப்பட்ட வேலை செய்து பலர் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களைப்பற்றிய கும்மிப் பாட்டும் உண்டு. வேலை செய்து விட்டு இரவிலே நேரங்கழித்து ஒருவன் வீட்டிற்கு வருகிருன். வந்து கதவைத் திறக்கும்படி மனேவியைக் கூப்பிடுகிருன். நேரங்கழித்து வந்தவனோடு அவள் ஊடிக் கதவைத் திறக்கத் தாமதிக்கிருள். இந்தப் பாடலிலும் ஒன்று, இரண்டு, மூன்று என்ற கணக்கு வருகிறது.

ஒன்னும்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி