பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,148 காலந்தோறும் தமிழகம் வரியிலிடு அதிகாரி” இவர்கள் எல்லாம் இடம்பெற்றதே புரவுவரித் திணைக்களம். ஆட்சிக்குத் துணையாக நின்று பணிபுரியும் பல்வேறு அதிகாரிகளுக்கும், அரையன், பேரரையன், மாராயன், மழவராயன் போலும் பல்வேறு பட்டப் பெயர்களைச் சூட்டிச் சிறப்பிப்பர். அரசனும், அமைச்சர்களும், உடன் கூட்டத்து அதிகாரி களும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நாட்டு மக்களின் குறைகளையும், முறையீடுகளையும் நேரில் கேட் டறிந்து, குறை தீர்த்தும், முறை செய்தும் வருவர்.