பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 காலந்தோறும் தமிழகம் டப்பட்ட அனைவரையும் பிராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதிப் புகவிடப்பேறாததாக. - 9. வுகமாக இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி மூப்பது குடும்பிலும் குடவோலைக்கு பேர்தீட்டி இப் பன்னிரண்டு சேரியுலுமாக இக்குடும்பும் வெவ்வேறேவாய் ஒலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே காட்டி குடம்புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் (போ)து மகாசபைத் திருவடியாரை கபால விருத்தம் நிரம்ப கூட்டிக்கொண்டு அன்றுள்ளுரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா. 10. மே மகாசபையிலே உள் மண்டகத்திலே இருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் விருத்திராயிருப்பார் ஒரு நம்பி மேல் நோக்கி எல்லா ஐனமும் காணுமாற்றால் எடுத்துக்கொண்டு நிற்க பகலே அந்தரம் அறியாதவன் ஒரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றறொரு குடத்துக்கே புகவிட்டுக் குலைத்து அக்குடத்தில் ஏர் ஒலை வாங்கி மத்தியஸ்தன் கையிலே. 11. குடுப்பதாகவும் அக்குடுத்த அவ்வோலை மத்தியஸ் தன் வாங்கும்போது அஞ்சு விரலும் அகலவைத்து உள்ளங் கையிலே ஏற்றுக்கொள்வானாகவும் அவ்வேற்று வாங்கின ஒலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்கு உள்மண்டகத்திருந்த நம்பிமார் எவ்லாரும் வாசிப் பாராகவும் வாசித்த அப்பேர் தீட்டுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரோர் பேர் கொள்வத்ாகவும் இக் கொண்ட முப்பது பேரிலும் தோட்டாவாரியமும் செய் தாரையும் வித்யா விருத்தர்களையும். . 12. வயோவிருத்தர்களையும் சம்வத்ஸ்ரவாரியரையும் கொள்வதாகவும் மிக்குநின்றாருள் பன்னிருவரையும் தோட்டவாரியமாகக் கொள்வதாகவும் இவ்விரண்டு திறந்த