பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களின் தமிழ்ப்பணி பொன்விழாக் கண்ட பெருமையினையுடையது. 'என் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில், தாம் எழுதிய கடைசி கட்டுரையில், "என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். கல்வி சரையில, கற்பவர் நாள் சில! காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி தொடரும்’ என்று புலவர் தம் தமிழ்ப் பணியைத் தொடரவேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால், காலம் இடம் தரத் தவறி விட்டதனால், முற்றுப்பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப்பணி எச்சமாகவே நின்று போயிற்று காலம் செய்த கொடுமை அது! தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும் உயர்வு தேடித்தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற் பணியாற்றிய புலவர் அவர்கள், "செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார். அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சுவடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று, "வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி." "மனையுறை புறாக்கள்." 'பெரும்பானற்றுப்படை-விளக்க்வுரை." "புலா அம்பாசறை." ஆகிய இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளோம்.