பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால அரசர் வரிசை, திருமாவளவன், அறம் உரைத்த அரசர், இலக்கியங் கண்ட காவலர், கலிங்கங் கண்ட காவலர், தமிழர் தளபதிகள். கழுமலப்போர், தமிழர்வாழ்வு, தமிழர் வாணிகம், பண்டைத்தமிழர் போர் நெறி, தமிழகத்தில் கோசர்கள், போன்ற வரலாற்று நூல்கள் பல படைத்த புலவர் அவர்கள், சங்ககாலம் தொட்டு, இன்று வரையான, தமிழகவரலாற்றைக், காலம் தோறும் தொகுத்து வரிசையாக எழுதும் பணியில் ஈடு பட்டிருந்தார்கள். அந்தப் பணியும் முற்றுப்பெறாது போனது. அந்தப் பணியில் அவர் எழுதி முடித்த வரலாற்றுப் படைப்புகளை தமிழக வரலாறு வரிசை என்ற பெயரில் வெளியிட முனைந்து, "தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்." "தமிழக வரலாறு-கோசர்கள்." "தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான். ஆகிய வரலாற்று நூல்களை வெளியிட்டுள்ளோம். புலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத வரலாற்றுக் கட்டுரைகளைத் தொகுத்து இன்று, காலந்தோறும் தமிழகம் (வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு) என்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத் தின் முன் படைக்கிறோம். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே' என்ற புறநானுாற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்