பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணிசெய்ய அளித்துவிட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர் களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவினையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம். "தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்! அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்: தமிழ் படிப்போர் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்வார் என்பது உறுதி! - -எழிலகம் பதிப்பகத்தார்.