பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ★ காலந்தோறும் பெண்


இத்தகைய அண்டிப்பிழைக்கும், நாகரீகமடைதல் என்ற வகையில்தான் பெண்ணும் தன் தனித்தன்மையை இழந்து வந்திருக்கிறாள். இந்த நாகரீகப் பின்னோட்டத்தில் மஞ்சளும், குங்குமமும் மிக முக்கியமான கருவிகளாகப் பயன்பட்டிருக்கின்றன என்றாலும் மிகையில்லை.

கணவன் இறந்தபிறகு, அவளுக்குச் செய்யப்படும் பல சடங்குகளில் முக்கியமான ஒன்றாக, மஞ்சள் குங்குமம் இழத்தலை அவள் உணரச் செய்வதாக அமைந்ததாகும். இந்தச்