பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு . பன்னெடுங் காலமாகவே தமிழர்கள் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கினர் என்பது வரலாற்று அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. அறிவியற்கலைகள் அவர் களிடம் பயன்முறைக் கலைகளாக மிளிர்ந்தன என்ப தற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இன்று மேனுட் டார் சயன்ஸ் என்ற பெயரால் குறிப்பதைத்தான் நாம் அறிவியல் என்று வழங்குகின்ருேம். சயன்ஸ் என்ற சொல் அறிவு எனப் பொருள்படும் கிரேக்க சொல்லி னின்று தோன்றியது ; மனிதன் வாழும் சூழ்நிலை, சுற்றி யுள்ள உலகம், பிற அண்டங்கள் முதலியவற்றின் தன்மைகளைத்தான் அறிவியற்கலைகள் உணர்த்து கின்றன. பண்டைத் தமிழர்கள் இன்றிருப்பதுபோன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனிக் கலைகளாக வளர்த்து வைத்திருந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது போயினும் அக் கலைகளைப்பற்றி ஒரளவு அறிந்திருந்தனர். அவை அவர்கள் வாழ்வில் பயன்முறை அறிவியல் துறை களாக (applied Sciences) மிளிர்ந்தன என்பதற்குப் பல் வேறு சான்றுகள் உள; அவற்றுள் இலக்கியச் சான்றும் ஒன்று. இதை ஒரளவு ஆராய்ந்து காண்போம். வானியல், கோளியல், உயிரியல், பெளதிகஇயல், பொறியியல் முதலிய பல்வேறு துறைகளிலும் அவர்கள் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்குப் பல இலக் கியச் சான்றுகள் உள. என்ன காரணத்தாலோ அவர்கள் இன்றுள்ளதுபோல் அத்துறைகளைத் தனியாக வரையறை செய்து பாதுகாக்கவில்லை. ஒருக்கால் அவ்வாறு வரையறுத்து வைத்திருந்திருக்கவும் கூடும் ;