பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

காலமும் கவிஞர்களும்




இது போன்ற காட்சிகளை நன்கு சுவைக்க வேண்டுமானால் நாட்டியக் கலையினைப்பற்றி ஓரளவு நன்கு தெரிந்திருத்தல் வேண்டும்.


இங்ஙனம் வழிவழிவந்த கவிஞர்கள் இயற்கையில் தாம் கண்ட காட்சிகளைத் தமது கற்பனைத் திறத்தால் கவிதைகளாக வார்த்துத் தந்து இடத்தாலும் காலத்தாலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற நம்மை மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் படைத்த கவிதைகள் தமிழ் மொழி உள்ள அளவும் அவற்றைப் படிப்பவர்களே மகிழ்வித்துக் கொண்டிருக்கும் என்பதற்கு என்ன தடை ?