பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

275 கால்டுவெல்


ஆட்சியுரிமையினால் இந்த மக்களின்மேல் நடைமுறையில் செலுத்தும் அதிகாரத்தையோ கடைசி உடன்படிக்கைக்கு முன்போ அல்லது பின்போ நம்மால் அவரிடமிருந்து பறிக்க முடியவில்லை. இதனால் ஓர் அங்குல அதிக எல்லையைக் கூட நம் வசப்படுத்த முடியவில்லை. ஒரே ஒரு பகோடா நாணயத்தைக் கூட நம்முடைய கஜானாவில் கூடுதலாகச் சேர்க்கவும் முடியவில்லை. அப்போதைக்கப்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கக் கம்பெனியின் தனி அதிகாரத்தினால் உங்களுக்கு அதிகாரம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் செயல்படுமுன் கவர்னர் ஜெனரல், ஆலோசனைக் குழு இவற்றின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கடிதம் கிடைக்கும் போது இருக்கும் நிலையில், பாளையக்காரர்களைப் படைக்கலமற்றவர்களாக்க, அடங்காதவரைத் தண்டிக்க, வழக்கிலுள்ள உரிமைகளைச் சரிசெய்ய, கொடுங்கோலாட்சியாலும் துன்பங்களினாலும் அல்லல்படும் இன்றைய நிலைமை மாறி, அங்கெல்லாம் பணிவும், வளமையும் உண்டாக்கத்தக்க உள்நாட்டு நடவடிக்கை முறையைப் புகுத்த-தேவையான உறுதியான உபாயமுள்ள நடவடிக்கைகள் அடிக்கடி எடுக்க உமக்கு அதிகாரம் கொடுக்கிறோம்.

உங்கள் நடவடிக்கைகளின் முழுமையான இன்றியமையாமை பற்றிய அறிக்கையைப் பெற்றதும் கப்பங்கட்ட வேண்டிய பாளையக்காரர் மீது எடுக்க வேண்டிய அம்முறைகளைப் பற்றி அவரிடமிருந்து கடைசியாக வந்த கடிதங்களிலிருந்து அவரது உடன்பாட்டை எதிர்பார்ப்பதைவிட அவற்றைப் பெற வேண்டுமென விரும்ப வேண்டும். ஆகையால் ஒரு வேளை அவர் உடன்பட மறுத்தால் நீங்கள் எடுக்கின்ற வன்மையான முறைகளைச் செயல்படுத்துவதில் குறுக்கிடமுயற்சிக்கும் அவர் முயற்சிகளை எதிர்க்கும் படியாகத்தான் கட்டளையிட முடியும். அதனால் ஆயிரக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்குத் தேவையான அமைதி, வளம் இவற்றைப் பெருக்குவதிலும், அதன் பயனாய் இறுதியில் நவாபின் சார்பில் உண்மையான நிலையான நன்மை ஏற்படுத்துவதிலும், நாம் அக்கறையில்லாமல் இருக்கிறோம் என்று எண்ண இயலாது.”

மேற்கண்ட நிகழ்ச்சிகளிலிருந்து திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அப்போதைக்கு அப்போது தீர்மானமாகவோ அல்லது சந்தர்ப்பத்தை ஒட்டியோ சிறு மாறுதல்கள் ஏற்பட்டது போல் தோன்றியது. இருந்தாலும் அது முழுமையான அல்லது நிலையான சீர்திருத்தத்தை ஏற்படுத்த இயலும், பாளையக்காரர்கள், குத்தகைக்காரர்கள் இவர்களின் கொடுமை அநீதி இவற்றிற்கு முடிவு ஏற்படுத்த இயலும். நிரந்தர