பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

305 கால்டுவெல்


அவர்கள் மனமார உடன்பட்டார்கள் என்று நம்புவதற்கான காரணங்கள் இருந்தன. (ஆமாம், எல்லாருமா கட்டபொம்மன்? ஐந்து பாளையக்காரர்கள் - ந.ச.) அரச முன்னோடிகள் கோட்டைகளை அழிப்பதை விடத் தாங்களே அவற்றை அழித்து விடுவது கண்யமானது என்ற விவரத்தை அவர்கள் நன்றாய் உணர்ந்ததாகத் தெரிகிறது. தங்கள் பாளையங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் அவ்வளவு பெரிய படை செய்யக்கூடிய கேடுகளைப் பற்றி அவர்கள் அறியாமலிருப்பதாகத் தெரிய வில்லை. அந்த ஐயத்தையும் என்னால் இயன்றவரைக் கூடுதலாக்கிவிட நான் தயங்கவில்லை.

கோட்டை அழித்தலை மேற்பார்வையிடவும் ஆயுதங்களைத் தொகுக்கவும் நான் அந்தப் படையைப் பிரித்தேன். இப்படையின் கடைசிப் பகுதி கயத்தாற்றை விட்டு இன்று காலை புறப்பட்டது. அரசு கட்டளைகளைச் சரிவரச்செய்யக் கண்டிப்பான ஆணைகளுடன் தங்கள் அதிகாரிகளைப் பாளையக்காரர்கள் வெவ்வேறு கம்பெனிக் கூட்டங்களுடன் அனுப்பி வைத்தனர் என்ற செய்தியைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தலைமைப் பாளையக்காரர்கள் தங்கள் நிர்வாகிகள் மூலம் அனுப்பிய கட்டளைகளைச் சரிவரச்செய்து முடித்து விட்டார்கள் என்று அறிந்து நான் மனநிறைவடையும் வரை அவர்கள் கயத்தாற்றில் என்னுடன் தங்கியிருக்க உடன்பட்டனர். நாங்கள் பிரிவதற்கு முன் பாளையக்காரர்கள் தாங்களாகவே அரசாங்கக் கட்டளையை நிறைவேற்ற என்னிடம் ஆள் உதவி தேவை என்பதைத் தெரிவிக்கும் அளவுக்கு அவர்கள் ஆவலைத் தூண்டினேன். அவர்களுள் சிலர் கோட்டைகளை இடிக்க அந்தந்த கிராமத்திற்கருகிலுள்ள சர்க்கார் கூலிகளின் உதவியைத் தங்கட்குப் பெற்றுத்தர வேண்டுமென்றும் என்னிடம் வேண்டிக் கொண்டனர். முடிவாகக் கோட்டைகளை இடிப்பதற்குக் கூலிகள் உதவி தேடிய பாளையங்களுக்கு, வெகு அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கு உடனே தேவையான கட்டளைகளை நவாபு கச்சேரியிலிருந்து அனுப்புமாறு விண்ணப்பித்துக் கொண்டேன். கூலிகள் எந்தப் பாளையக்காரர்களுடைய கோட்டையை இடிக்க உதவி செய்கிறார்களோ அந்தப் பாளையக்காரர்களே அவர்களுக்குக் கூலி கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. (ஐயோ! தமிழ்த்தாயே! இத்தகைய இழிசிறையும் பெற்றாயே! ந.ச.) பாளையங்களிலுள்ள ஒவ்வொரு கோட்டையும், மொத்தமாக சுமார் 42 கோட்டைகளையும் பாளையக்காரர்களே அழிக்கும்படியாக அவர்கள் ஒப்புக் கொள்ளும்படிச் செய்த என் திட்டத்திற்கேற்ப அந்த வேலையை இந்த மாத முடிவுக்குள் வெற்றிகரமாய்ச் செய்து முடித்துவிடுவார்க-