பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிகம்

169


பொருள்களின் பயனை அவர்கள் அறிவார்கள். பழங்கால மக்களுக்குக் தெரிந்த கோள்களில் சனி, புதன் நீங்கலாக எனைய கோள்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. மருந்து, சிற்றுார், படகு, குடைமரம், கப்பல் ஆகியவை தெரிந்திருந்தன. இலங்கையைத் தவிர்ந்து, கடல் கடந்து அவர்கள் வேற்றுநாடு சென்றதில்லை. இலங்கைகூட அக்காலம் கால்நடையாய்க் கடந்து செல்லும்படி கிடந்திருக்கலாம் போலும் ! தலைநிலம் [1], தீவு [2] என்ற சொற்கள் அவர்களிடை இல்லை. உழவும், போரும் அவர்கள் நாள்முறை வாழ்வு. வில், அம்பு, ஈட்டி, வாள் இவை போர்க் கருவிகள். வாழ்க்கைக்கு வேண்டிய நூற்றல், நெய்தல், சாயமிடல் முதலிய தொழில்கள் யாவும் அவர்களிடை மேம்பட்டிருந்தன. மட்பாண்டம் வனைதலில் அவர்கள் தலைசிறந்து விளங்கினர்.

பண்டைத் திராவிட மக்களிடை நாகரிகம் சிறந்து பரவியிருந்ததற்கு இதைவிட வேறு சான்றும் வேண்டுமோ?





1. Continent. 2. Island. |


  1. 1
  2. 2