பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காளிங்கராயன் கொடை போதுதான் அந்தப் பாருங்கல்லேக் காணுது வருத்தப் பட்டார்கள். சுக்கு நாருகப் போன பாருங்கல்லுக்கு இன்னும் கோபம் தணியவில்லை. காதலர்கள் மலையிலிருந்து இருட் டிலே திரும்பி வரும்போது அவர்கள் கால்களிலே மோதி அவர்களே இடறி விழச் செய்து அவர்கள் மண்டையைப் பிளக்க வேணுமென்று திட்டமிட்டுக்கொண் டிருந்தது. ஆனல் அதன் எண்ணம் கைகூடவில்லே. காதலர்கள் இருட்டிலே அந்தக் கல் சிதறிக் கிடக்கும் இடத்திற்கு வந் தார்கள். புதிதாக வழியிலே கற்கள் விழுந்து கிடப்பதைக் கண்ட காதலன் தன் காதலியை மெதுவாகத் தன் கை களிலே தூக்கிக்கொண்டான். கானே கவனமாகப் பார்த்து நடக்கிறேன்; எதற்காக உங்களுக்கு வீண் சிரமம்' என்று காதலி கொஞ்சி மொழி பேசினுள். 'இதென்ன சிரமம்? இந்தக் கல்லெல்லாம் முன்னல் இங்கே இப்படிக் கிடக்கவில்லை. எப்படியோ இன்றைக்கு வந்திருக்கின்றன. இருட்டிலே இவைகளில் கால் மோதிவிடும்” என்று சொல் விக்கொண்டே அவன் அவளைத் துாக்கிக்கொண்டு எச்ச ரிக்கையாக கடந்தான். - 'உங்கள் காலில் மோதிவிடாதா?’ என்று அவள் கவ்லேயோடு கேட்டாள். 'என் காலிலா கான்தான் தினமும் கல்லிலும் முள்ளி லும் திரிகிறவன். என் கால்களுக்கு அவைகளைக் கண்டு ஒதுங்கி கடக்கத் தெரியும்” என்ருன் அவன். அவன் கூறியது மெய்தான். ஒரு கல்லிலும படாது அவன் அந்த இடத்தைக் கடந்துவிட்டான். பாருங்கல் லுக்கு ஆத்திரம்'ஆத்திரமாக வந்தது. அதன் நூறு சுக்கல் களும் உள்ளுக்குள்ளே கொதித்துப் புழுங்கின.