இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானல்லவோ? சி - இந்தக் கவிதைக்கு அடியெடுத்துக் கொடுத்து மகாக இக்பாலின்? , கவிதை யொன்றின் கருத்தாகும். எனினும் இறை நம்பிக்கை கொண்ட இக்பலின் கருத்துக்கு ஒரு திருப்பம் கொடுத்து, இறைவனையே கேள்விக் குறியாக்கி, மானுடத்தின் பெரு%ை பாடும் கதை இது. மண்ணைப் படைத்தவள் நீ என்பதால்- உடலை வாழ்த்தி வணங்கெனப் பேசுகின்றார்! -- அந்த மண்ணில் அதிசயம் ஆயிரம் பண்ணிய மானிடனைப் போற்றக் கூசுகின்ருர்

கண்ணைப் படைத்தவன் நீ எனினும்- உயர் மாடம் சமைத்தவன் நானல்லவோ? கதம லைக் கொடுத்தவன் நீ எனினும்-திலக் காவியம் செய்தவன் நானல்லவோ? ஆற்றைப் படைத்தவன் நீ எனினும்-- அதில் அணைகள் வகுத்தவன் நானல்லவோ? காற்றைப் படைத்தவன் நீ எனினும்-வானக். கப்பல் விடுத்தவன் நானல்லவோ? 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/101&oldid=989605" இலிருந்து மீள்விக்கப்பட்டது