இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண» சிவப் பிளந்ததலுன் அடங்கியதோர் மாபூத கணமொத்த சக்தியினைக் கண்டறிய லாகிடுமோ? சந்திரனாம் லோகமதைத் தானடையும் முயற்சியிலே . உந்திப் பறந்துயர்ந்தே உலகை வியப்புறுத்தும் விந்தையென ஏவுகளைக வினைத்திருக்கக் கூடிடுமோ?

  • இன்றைக் கணவெல்லாம்

எதிர்காலம் நனவாகும்! இன்றும் உன் முன்னால் குன்றுமணி போலாகும். ஆதலினால்- ஆசைகொண் டகிலமெலாம் அடையவெணும் லட்சியத்தில் மோசமொன்று மில்லை அந்த முயற்சியிலே தவறில்லை! அறிதோறும் அறிதோறும் அறியாத பற்பலவும் தெரியவரும் தவறுகளைத் திருத்துகின்ற காரணத்தால் அறிவில் சிறுமையில்லை! - ஆசையுறல் தீதில்லை! அண்டாண்டம் பெரிதென்றும், அனந்தமென்றும், அறிவாலே கண்டறிவ தால் பெருமை காண்பதுவே சிறப்பாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/59&oldid=989565" இலிருந்து மீள்விக்கப்பட்டது