இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலி முடித்த புரட்சி - 56 இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்; கிருத யுகம் எழுக மாதோ என்று ருஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சியை வாழ்த்தி வர வேற்றுப் பாரத நாட்டில் முதற்குரல் எழுப்பினான் பாரதி. அந்த ருஷ்யப் புரட்சியின் ஆண்டு ' விழா ஒன்றின் பேரது எழுதப்பட்ட பாடல் இது.. காவியத்தில் கற்பனையில் கதையில் மற்றும் கட்டுரையில் கண்டறியாப் புதுமை எல்லாம் சோவியத்தில் ஒரு புதுமை இல்லை, பொய்மைச்', சொப்பனமும் இல்&யெனப் பல்லோர் மெச்சும் பாவzer யில் சொர்க்கபுரி தன்னை இந்தப் பாரகத்தே உருவாக்கி, மக்கள் தம்மைத் தேவர்குலம் என அமரர் சிறப்புற் றோங்கச் . - செய்த நவ புகட்புரட்சி வாழி! வாழி! இயந்துண்ணும் வாழ்வில்லை; மக்கள் தம்மை ஏமாற்றிச் சுரண்டுவதால் செல்வம் சேர்த்துக் கரந்துண்ணும் புல்லுருவிக் கூடட்டம் இல்லை; களவில்லை; அளவில்லாச் செல்வம் எல்லாம் திரந்துண்ணும் புதுவாழ்வு; பொதுமை வாழ்வு: நீடுலக மக்களெல்லாம் தம்மைத் தாமே , 4ரந்துண்ணும் வாழ்வு - என்னும் பொதுமை ஞான போதனையைச் சாதித்த புரட்சி. வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/86&oldid=989572" இலிருந்து மீள்விக்கப்பட்டது