பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை



தயக்கம் ஏன் ?

ஆண்டவன் வெறுத்தாரோ-தமிழை
அன்பர்கள் தாம் மறுத்தாரோ ?
—ஆண்டவன்
வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி
விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ
—ஆண்டவன்
நெஞ்சை உருக்கும் திருவா சகநூல்
நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்
அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே
—ஆண்டவன்
இந்தகன் னாட்டார் எடுத்தது கோவில்
இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில்
வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு
வாழ்ந்தகம் மொழிக்கோ வந்தது தாழ்வு
—ஆண்டவன்