பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




வாய் நோகுமோ?

வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ ஐயா
வந்தவர்க்குத்தான் அது தாழ்வாகுமோ
—வணக்கம்
கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம்
பணிகின்றோம்
கனிவான மொழியான தமிழாலே துணிவாக
—வணக்கம்
பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்றார்
பிழையாக இங்கேதான் ஏசுகின்றார்
மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு
மனமின்றி அறிவின்றிக் கூசுகின்றார்
—வணக்கம்
எங்கெங்கும் காணாத காட்சி ஐயா
இனியுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா
அங்கங்கு தாய்மொழியின் ஆட்சி ஐயா
ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா
—வணக்கம்

17