பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




உலகில் ஒரு நூல்!

ஒருநூல் அது பெருநூல்
உள்ளம் உயர்த்திடும் குறள் நூல்
―ஒருநூல்
வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும்
திருநூல் பண்பினைத் தருநூல் உலகில்
—ஒருநூல்
அகழ்தொறும் அகழ்தொறும் வெளிப்படும்
புனல்போல்
பயில்தொறும் பயில்தொறும் அகப்படும்
புதுப்பொருள்
புகழ்சொல ஆயிரம் நாவுகள் வேண்டும்
புவியோர் உணர்ந்து போற்றிடல் வேண்டும்
—ஒருநூல்
அறிதொறும் அறிதொறும் மனவளம் மிகுந்திடும்
அகப்பொருள் புறப்பொருள் அனைத்தும் நிறைந்திடும்
அறநெறி வாழ்வினில் திளைத்திடப் புணையாம்
அன்பும் அறிவும் வளர்ந்திடத் துணையாம்
—ஒருநூல்