பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழகம் தாழ்ந்ததேன் ? [J தமிழகமே-நம்நாடு தாழ்நிலை எய்திய தெதனுலோ ? -தமிழகமே அமிழ்தெனும் தமிழ்மொழி காத்தனர் வேந்தர் அருஞ்செயல் புரிந்தனர் வாழ்ந்தனர் மாந்தர் -தமிழகமே முரசொலி கேட்டால் மூண்டெழுவார்-போரில் முதுகிடப் புறப்பகை கண்டிடுவார் அரசரும் புலவரும் இணைந்திருந்தார்-இங்கே அகப்பகை எவ்விதம் புகுந்ததுவோ ? -தமிழகமே தென்றல் தவழ்ந்திடும் தமிழகமே-இன்று தேய்ந்திடக் கண்டிரோம் என்றெழுந்தார். நன்றிது செய்தனர் எனமகிழ்ந்தோம்-ஆல்ை நாய்க்குணம் புகுந்தது பாசறையில் ! -தமிழகமே 50