பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை உயிர்த் தமிழே! முன்னைப் பழம் பொருளே-வேந்தர் மூவர் உயிர்த் தமிழே! கன்னற் சுவை யமுதே-என்றன் கண்ணின் மணி விளக்கே! என்னைப் பழிப்பவனை-நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனைப்-பகையா உள்ளம் நினைக்கு தம்மா! தீங்குனச் சாரு தென்ருல்-என்றன் சிந்தை கொதிக்கு தம்மா! பாங்குனை மேவு தென்ருல்-நெஞ்சம் பாய்ந்து மகிழு தம்மா! ஆங்கிலம் கற்றவரும்-வந்த அயல்மொழி கற்றவரும் ஈங்குப் புறக்கணித்தார்-அறிவை என்று பெறுவாரோ? 17