பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் தெய்வம் கோவில் எனது நெஞ்சம் - தனிலே கூடி யருள் புரிவாய் காவியப் பா மாலை - அணிந்தே காத்திட வேண்டு மம்மா நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு நல்ல மனந் தருவாய் பாவினில் சொல் லிலெல்லாம் - சத்தி பாய்ந்து வர வேண்டும் உன்றன் திருப் பெயரைச் - சொல்லி ஊரினை ஏய்த் திடுவோர் நன்றென வா ழுகின்ருர் - நின்றன் நன்மையை நா டுகிலார் துன்றிய பண் பினரும் - உன்பால் தூயநல் லன் பினரும் நின்று வருந் திடவே - செய்தல் நீதியின் பாற் படுமோ?