பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை === -- எங்கள் காடு எடுப்பு எங்கள் நாடு வாழ்க வாழ்கவே வளர்கலை மேவும் அறிஞர்கள் சூழும் -எங்கள் முடிப்பு தனக்கென்று வாழாத நல்லவனைப் பெண்மையிங்குத் தலைநிமிர உழைத் தவனை எங் கேசென் ருலு ந் தன் மனத்துள்ள கருத்தினையே சொல்பவனை மற்றவரை மதிப்பவனைக் கலியாண சுந்தரனைத் தருநாடு துலோடும் ஏடுகளைச் செல்லோடி அழிக்காமல் துழைந்தோடித் தேடியருள் சாமிநாதன் வளர்நாடு பாலோடு துளிநஞ்சு கலந்தாலும் தீமைஎனப் பகர்ந்தவனைத் தமிழியக்க மறைமலையைப் பெறுநாடு சிறுபிள்ளை உள்ளங்கள் சீர்திருந்த வேண்டிநலம் சேர்கவிகள் பொழிமுகிலாம் கவிமணியின் தவநாடு வரும்வெள்ளை மாந்தருக்குப் பணிவதில்லை என்று கவி வாகைகொளும் பாரதியும் பரம்பரையும் விளைநாடு 42