பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழகம் தாழ்ந்ததேன்? எடுப்பு தமிழகமே-நம்தாடு தாழ்நிலை எய்திய தெதேைலா? -தமிழகமே தொடுப்பு அமிழ்தெனும் தமிழ்மொழி காத்தனர் வேந்தர் அருஞ்செயல் புரிந்தனர் வாழ்ந்தனர் மாந்தர் H -தமிழகமே (0ֆե-՛ւ முரசொலி கேட்டால் மூண்டெழுவார்-போரில் முதுகிடப் புறப்பகை கண்டிடுவார் அரசரும் புலவரும் இணைந்திருந்தார்-இங்கே அகப்பகை எவ்விதம் புகுந்ததுவோ? -தமிழகமே தென்றல் தவழ்ந்திடும் தமிழகமே-இன்று தேய்ந்திடக் கண்டிரோம் என்றெழுந்தார் நன்றிது செய்தனர் எனமகிழ்ந்தோம்-ஆளுல் நாய்க்குணம் புகுந்தது பாசறையில்! -தமிழகமே விடுதலை என்ருெரு சொல்கேட்டோம்-நாட்டில் வீரமும் மானமும் உண்டென்ருேம் கெடுதலைப் புரிந்திடும் வினையாளர் -நாடு கீழ்நிலை எய்திடச் செய்கின்ருர் -தமிழகமே פי יח தாக 45