பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 17| அரசை நிலைக்க வைக்கமுடியும் என்று சொன்னதாகும். இது மிகவும் இன்றியமையாத அறிவுரையன்றோ? இவ்வாறு கூறி, உன்னைத் தவிரச் சுக்கிரீவனுக்கு வேறு சிறந்த துணை இல்லை என ஊக்குவித்து அனுமனை அனுப்பிவிட்டு, இலக்குவனுடன் இராமன் வேறொரு மலையை அடைந்தான். - பின்னர் அங்கிருந்து மதங்கமா முனிவர் உள்ள உருசிய முக மலையை அடைந்து, இலக்குவன் அங்கே அமைத்த குடிலில் இராமன் தங்கினான்.