பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பரவினால்தான், சீதை இருக்கும் இடத்தை எளிதிலும் விரைவிலும் காண இயலும். வெள்ளம் என்பது ஒரு பேர் எண். 'நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வன்முறை” (2:13, 14, 15) என்னும் பரிபாடல் நூல் பகுதியால் இதனை அறியலாம். இது பற்றித் தொல்காப்பியரும் கூறியுள்ளார்: 'ஐ.அம்,பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும் (394) என்பது நூற்பா. தாமரை (ஐ), வெள்ளம் (அம்), ஆம்பல் (பல்) - (நெய்தல் - அல்) என்பன பேரெண் பெயர்கள் என்பதை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் எடுத்துக்காட்டியுள்ளனர்.