பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவின் கிராமப்புறங்களில் வர்க்கக் கட்டமைப்பு மாறுபாடுகளைப் பற்றி உள்நாட்டு-வெளிநாட்டு நிதியுதவியுடன் அவர்கள் ஆராய்ச்சிகளைச் செய் கிறார்கள். செய்து கொண்டே இருக்கிறார்கள். எந்த நிதியுதவியும் இல்லாமல் ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். இது உண்மையான ஆராய்ச்சி. இனிமேல் அவர்கள் இந்த நூலை மேற்கோள் காட்டி ஆராய்ச்சிகளைத் தொடர்வார்கள்.

தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியங்களையும் புதுக்கவிதை நூல்களையும் வெளியிட்டுப் பிரபல மடைந்திருக்கும் “அன்னம்’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறேன்.

தோழர் அ.சீனிவாசன் இதைப் போன்ற நூல்களைத் தொடர்ந்து எழுதி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கருத்துக்களை வளர்க்க வேண்டும். இடதுசாரிச் சிந்தனை உள்ளவர்கள் இப்புத்தகத்திலுள்ள கருத்துக் களை விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். -

சிவகங்கை நா. தர்மராஜன் I 5.1 0. 92