பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆட்டமாகவும் திகழ்கின்றது. ஆழ்ந்த பொறுமையையும் அதிகத் திறமையையும், சிறந்த திறன் நுணுக்கங்களையும் சீரிய கலை நுணுக்கமான ஆட்டமுறைகளையும் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கின்ற கிரிக்கெட் ஆட்டம், உலகிலேயே ஓர் உன்னத இடத்தையும், உயர்ந்த கெளரவத்தையும் பெற்று விளங்குகிறது என்றால், அது பெருமை மட்டுமன்று. அதுவே உண்மை என்றும் கூறலாம்; மகிழலாம்.