பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


தாக இருந்தாலும், பந்தெறியாளர் அல்லது அடித்தாடும் ஆட்டக்காரர்கள் காலை ஊன்றி நிற்க இயலாத அளவுக்குத் தரை வழுக்கல் நிறைந்ததாக இருந்தாலும்;

தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் எளிதாக இயங்கிட முடியாத அளவு அமைந்திருந்தாலும், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று விதிகள் கூறுகின்றன.

பந்தாடும் தரைப் பகுதியை மட்டுமன்றி, மைதானம் முழுவதும் உள்ள பரப்பினையும் பரிசீலிக்க வேண்டும்

அதாவது, சூழ்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அல்லது ஆட்டத்தைத் தொடர்ந்தால் அபாயத்திற்குரிய ஆட்டமாகிவிடும் என்ற நிலை அமைந்தாலும் ஆட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்று விதிகள் கூறுகின்றன.

142. பந்தை எறிய கை வழுக்குகிறது, புல்தரை ஈரமாக இருக்கிறது என்று யாராவது குறை கூறினால், ஆட்டத்தை நிறுத்தி வைக்கலாமா?

இந்தக் காரணங்களுக்காக, ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியாது. தொடர்ந்து ஆட்டத்தை நடத்தலாம்.

143. தற்காலிகமாக ஆட்டத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் தொடங்கிவைக்க எவ்வாறு முடிவெடுப்பார்கள்? அந்த அதிகாரம் யாருக்குண்டு?

நிறுத்திவைத்த ஆட்டத்தை மீண்டும் தொடங்க, குழுத் தலைவர்கள் முயலலாம்.

அத்தகைய உரிமை நடுவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், வேறு எந்த ஆட்டக்காரர்களும் பின்வராமல், தொடராமல், துணையில்லாமல்