இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
ஆண்மையும் ஆற்றலும் மிக்க வீரனான மிலோ தனது வயதான காலத்திலும் வீதியிலே நடந்து வருகின்ற பொழுது, பார்க்கின்ற இளைஞர்கள் எல்லோரும் மிலோவைப் போல தாங்களும் வரவேண்டும். வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். அத்தகைய கவர்ச்சி மிக்க வீரனாக இருந்தான் மிலோ. அவ்வாறு ஆசைப்பட்டவர்களில் ஒருவன் பெயர் பயிலஸ். இனி மிலோவைக் குருவாகப் பாவித்து தன்னை வளர்த்துக் கொண்ட பயிலஸ் என்பவனின் கதையைக் காண்போம்.