பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




18. வீராதி வீரன் மிலோ


பாரதக் கதையிலே வரும் கதாநாயகர்களில் வலிமைக்குப் புகழ் பெற்றவன் பீமன், அவன் உண்ணும் உணவையும், பண்ணிய யுத்தங்களையும் பார்க்கும்பொழுது, நம்மையறியாமலேயே ஒரு வீர எழுச்சியினைப் பெறுவதும் உண்டு.

வண்டி வண்டியாக சோற்றை உண்டு, குடங்குடமாகப் பால் தயிர் குடித்து, மரங்களைப் பிடுங்கி, மலைகளைக் கிள்ளி பகாசுரனோடு சண்டைபோட்டான் என்று படிக்கும்பொழுது, இப்படியும் ஒரு மனிதனா என்று எண்ணுகிறோம். புராணக் கதையின் புகழ் பெற்ற வீரனான பீமன், பலவான் என்கிற பெரும் புகழ் பெற்றவனாக இன்றும் மிளிர்கிறான்.

அதேபோல, இராமாயணத்தில் வரும் அனுமனின் ஆற்றலும் அளவிடற்கரியதாகும். சஞ்சீவி மலையையே கையால் பெயர்த்தெடுத்துச் சென்றதும், இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டிச் சென்றதும் எல்லாம் அனுமனின் வீரதீர நிகழ்ச்சிகளாகும்.

உண்மையாக நடந்ததென்று உலகிலே பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே, பீமனையும் அனுமனையும் மிஞ்சுகின்ற அதிக சாதகங்கள் புரிகின்ற ஒரு வீரனாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான். வருணிக்கப்பட்டிருக்கிறான் இந்த மிலோ.

அவன் வீரக் கதையைப் படியுங்கள்.