‘கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்’ என்னும் இந்நூல் மாணவர்கள் பழங்காலச் செய்திகளை உணர்ந்து இன்புறும் வண்ணம் உயர்நிலப் பள்ளித் துணைப்பாட நூல்களுக்கு என அரசாங்கத்தார் குறிப்பிட்டுள்ள முறைப்படி எழுதப் பெற்றதாகும். வெறும் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இடையிடையே இலக்கியச் சுவைப்பட இந்நூல் எழுதப்பட்டுள்ளமை அதனை ஒரு முறை கண்ணுறுவோர்க்கு நன்கு விளங்கும். அங்ஙனமே அயல்நாட்டுச் செய்திகளுடன் ஆங்காங்கு நம் தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்களும் குறிப்பிடப்பட்டி குத்தல் இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
பழைய பழக்க வழக்கங்களை உணர்ந்து போற்றுதல் நம் கடமையாகும். அவை இளமாணவர் உள்ளங்களில் பதியுமானல் அத்தகைய மாணவர், தம் பிற்காலத்தில் நம் முன்னேர்களைப் போன்று பெருமை பெறுவர் என்பதை உளங்கொண்டே இந்நூல் எழுதப் பெற்றது. இதனைத் துணைப்பாட நூலாகத் தங்கள் பள்ளிகளில் அமைத்து மேலும் என்னை இத்துறையில் ஊக்குமாறு பெரிதும் வேண்டிக் கொள்கிறேன்.
ஆசிரியர்.