பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

இறைப்பவர், வண்டி இழுப்பவர் பாடிக் கொண்டே பணி புரிவதைக் கவனிக்கலாம்.

எதினியர்கள் கப்பல் போரில் தனிப்பட்ட நுண்ணறிவும் நற்பயிற்சியும் பெற்றிருந்ததால், இதில் அவர்கள் தலை சிறந்து விளங்கினர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எதினிய மக்கள் இந்தக் கடற்போரில் தம் எதிரிகளிருக்குமிடத்தை அணுகித் தம் வன்மை தோன்ற கப்பலின் மேல்தட்டினின்றே போர் புரிவர். இந்தத் தருணத்தில் எதிரிகளுக்குப் பெருவாரியாக அழிவை உண்டு பண்ணுவர். எதினியர் தம் எதிரி பலக் குறைவுடையவன் என்பதை அறிந்தால், தம் கப்பலைச் சுற்றிச் சுற்றிச்செலுத்தி, அவர்கள் பதுங்கி ஓடி மறைதற்கும் வகையறியாதிருக்கச் செய்து விடுவர். ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளக்காரம் தானே ? இந்தத் தந்திரத்தால்தான் பிலோபோனெஷியன் (Pelo Ponnesians) கப்பல்களை மடக்கி, அவற்றில் உள்ளவர்கள் இன்னது செய்வதென அறியாது திகைக்கிச் செய்து, காற்றின் வேகத்தால் அவை சிதறடிக்கப்பட்ட நிலைக்குக் கொணர்ந்தனர் என்பதையும் அறிகிறோம்.

கடற் போருக்குப், புறப்படுமுன் தன் வழிபடு தெய்வங்கட்கு வழிபாடுகளை நடத்துவர். அது போது எதினிய மக்கள் கடற்கரையில் திரளாகக் கூடுவர். கூடி மாலுமிகள் புறப்பட்டுச் செல்லும் காட்சியில் ஈடுபடுவர். முதலில் தோல்வியே அடைந்தனர். இத்தோல்வியே ஏதென்ஸ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.