பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

x

கடவுள் வாழ்த்து முதல் ஆட்டுக் குட்டியானவரின் கலி யாணம் ஈறாக 28 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன ; கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பக்திப்பாடல்கள் உள்ளன. இன்றைய திருச்சபை பெரிதும் தமிழ் இசையை மறந்து இருக்கும் நிலை யில் இப்பாடல்களை விரும்பிப் போற்றுதல் வேண்டும். தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய பாடல்கள். கிறித்து பெருமானின் முழு வாழ்க்கையும் பாடப் பட்டுள்ளது. அவருடைய சிலுவைப் பாடுகள் நூலின் பெரும் பகுதியாக அமைந்துள்ளது. திருச்சபைக்கு எச்சரிப்பு, கிறித்துவின் இரண்டாம் வருகை, நடுத்தீர்ப்பு, கிறித்து பெருமான் திருமணவாட்டியாம் திருச்சபையில் மேன்மை பெறுதல் வரையில் நிறைவாக நூல் அமைந்துள்ளது.

வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக இந்நூலினை வெளியடுவதற்கு முழு உரிமையும் வழங்கிய நேசமணி பதிப் பகத்தின் உரிமையாளர், பாவாணரின் மகனார் திருவாளர் தே. மணி அவர்கட்கும், பாவாணர் குடும்பத்தார்க்கும் என் நன்றி உரித்தாகுக.

இந்நூலுக்கு ஏற்ற ஒரு முகவுரை எழுதி உதவிய பாவலர், பேராசிரியர் பொ. ஆ. சத்திய சாட்சியார் அவர்களுக்கு என் பணிவார்ந்த நன்றி உரித்தாகுக.

இந்நூல் வாயிலாக இயேசு கிறித்து பெருமான் பலருக்கு நன்மை வழங்கி அருள் புரிவராக.

இரட்சணிய யாத்திரிக நிலையம்
23-4-1981
மகாகவி எ.ஆ. கிருட்டிணர்
பிறந்த திருநாள்.

கிறித்து இயேசுவின் ஊழியன்
வீ. ஞானசிகாமணி