பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

பேரா. பொன்னு. ஆ. சத்தியசாட்சி
எம். ஏ.. பி.ஓ.எல்..
சென்னை கிறித்தவக் கல்லூரி
தாம்பரம் சென்னை 600059
ஏப்பிரல் 1981

தலைவர் :

கிறித்தரசர் தமிழ்ப் பேரவை

'கிறித்தவக் கீர்த்தனம்' என்னும் பெயர் தாங்கி மொழியியற் செல்வர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களின் பாக்கள் வெளியாகின்றன. மொழியிலேயே மூழ்கிக் கிடந்த பேரறிஞரவர்களுக்குப் பாவாணர் என்ற சிறப்புப் பெயர் வழங்குவதேனோ என்று சிலருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஐயப்பாட்டினை இந்த நூல் அகற்றி விடுகிறது. கவிதையும் கட்டுரைப் பாங்கும் ஒருங்கே ஒருவரிடத்தே அமைவது என்பது அரிதாகும். பாவாணரவர்களிடத்து இவையனைத்தும் காணப்பட்டன,

தேவநேயரவர்களின் மொழியியல் ஆராய்ச்சிகளைப்பற்றி யான் இங்கு ஒரு சிறிதும் கூறவில்லை. அது கடல்; பெருங் கடல். இங்கே இப்போது வெளியாகியுள்ள பாட்டு நூலைப் பற்றி மட்டுமே ஓரிரு கருத்துக்களைச் சொல்லி மகிழ்வேன்.

இந்த நூல் அளவில் சிறிது ; பொருளில் பெரிது; மிகப் பெரிது. இந்த நூலினை மேற்போக்காகப் பார்த்தால் கூட பாவாணரின் இசையறிவும், அது பரந்து பரவிக் கொண்டிந்த எல்லைகளின் விரிவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவற்றைப் படைத்து வழங்கியிருக்கிற பாவாணர் 'எப்படிப் பாடினரோ' நாம் கேட்கவில்லை, என்பதோர் ஏக்கம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இந்த நூலில் உள்ள பாட்டுக்கள் அனைத்திற்குமே இராகம், தாளம், மெட்டு ஆகிய பல குறிப்புகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. பாட்டுகள் பலவற்றிற்குக் கருநாடக