கிறித்தவக் கீர்த்தனம்
காப்பு
கலி விருத்தம்
பூவினிற் போகமே புந்தி பொருந்திடும் ஆவன மாந்தருக் கன்று வரைந்தன பாவினை யின்றியும் பண்டித ருள்ளரால் தேவனைப் பாடவுந் திருவருள் வேண்டுமே.
கடவுட்பரவல் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பிதா
மன்னுயி[1] ரென்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும் மன்னுயி[2] ரடைய வேக மகனை முன்னளித்துப் பாரில் இன்னதா யன்பு கூர்ந்தா ரெனிற்றிருப் பரம தந்தை என்னதென் றுரைப்பேன் ஈசன் எனக்கருள் செய்த வாறே.
குமாரன்
பாவியை மீட்க வின்பப்பரத் தைவிட்டிறங்கிப் பாவம் பூவிலோ ரேழை யாகிப் பொறை யொடு திரிந்து சுற்றி நாவினா லுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடு பட்டே ஆவியு மளித்த ஏசு வடியினை முடிமேற் கொள்வாம்.
பரிசுத்தாவி எண்ணரு மாதி நீர் மேலியங் கியே ஏசுதேவ புண்ணியன் தலைமே லன்று புறவமா[1] யிறங்கிச் சீடர் கண்ணிய பெந்தேக் கோத்திற் கனற்பெருங் காற்று வீசி மண்ணியல் மொழிகள் பேச மருவு தூயாவி போற்றி.
- ↑ புறா.