பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

12 தொகையறா

  ஆறுசாடிகளின் நீரை அருமை ரசமாகச் செய்த
     அற்புதமா மகிமைத் தேவன் 
  நீறு மூடுந் தழல்போல நிமலனாம் அவதாரன் 
     நித்திய மாவழி மெய்ச்சீவன்

சரணத் தொடர்

    ஏதேனில் ஆதி மணம் 
    ஏவாளோ டாதம் முனம் 
    ஈசனே குரு தந்தையும் மாமனும் 
    ஏசுவே திரு இந்தமகா மணம்

(கா) 13 மலைப் பிரசங்கம் செபிக்கும் முறை 'வாழலோ சகிப்ரோ' என்ற மெட்டு கீரவாணி- ரூபகம் பல்லவி

    செயம்பெறச் செயவே செபமே 
    செகமேயலகை தீர

அனுபல்லவி

    புயபல தானியல் மனமே 
    புவனமன்னும் போகும் பின்னே

(செ) சரணம்

அதிகவாச கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும் அகவுறையாண்ட வரறிவார் அறியது திகளே யமையும் இதர சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம் இறையைத் தரையிற் கும்பிட்டேத்தி இளகியன்பு மல்கி நின்றே (செ)