பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 பொந்தியுப்பிலாத்தின் விசாரணை ஏசுவின் மரணாக்கினை 'செந்தில்மா நகர்' என்ற மெட்டு பஞ்சபாதக மிஞ்சிய யூதரும் பானு வெழுந்தபின் கூடி- ஏசு வானவனைக் கொல்ல நாடி- மிகு பந்தனத்தொடு பொந்தியுப் பிலாத் தின் கரத்திடை கொண்டுவிட்டனர் பங்கமா மரணந்தனுக் காளான பண்ணவன் தீர்ப்பினைக்கண்டு -யூதாசு பாதகனுந்துயர் கொண்டு முந்து நாளதில் வந்தவெண் காசுகள் மூப்பரிடங்கொண்டு சென்று திரு மூர்த்தியைக் காட்டினே னென்று அவர் முன்பு தன் பிழை கூறி முப்பது வெண்பணங்களை மீளவைத்திடு முந்தியே யவர் எங்களுக் கேனென முன்னவன் கோயி லெறிந்தான்- பின்பு முடுகிப்போய் நான்று முடிந்தான் அந்த மாபண முங்கறை மாவிலை ஆகாது காணிக்கை யென்றே உடன் ஆசாரியர் நிலங் கொண்டார் அங்கே அன்னியப் பிணமடக்க வேளிடம் இன்னு மப்புலம் இரத்தமா நிலம் அன்றெரேமியா முந்துரை வாசகம் ஆனது வே நிறைவேறி- உரை வீணுறு மோதாசன் கூறி புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப் பூபதியோ வென்று கேட்டான் அவர் புகன்றபடி யென்னக் கேட்டான்-யூதர்