பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 பொறுமையுடன் கிருபை புகழ் பரிதாபம் பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம் இறுதியில டைகுவர் எல்லையில் கோபம் ஏதுஞ் செய்து மாறாத நீதம் ஒரு போதும் இலை பேதம் தெளி வேதம் திருடன் போல் மணவாளன் திடுமென வருவார் தெரிந்து கொண்டவருக்கே திகழ் பரந்தருவார் கருடன் கண்ட பனிபோல் கலங்குவர் மருவார் காலமெல்லா மவர் நிக்கிரகம் கல்லு முருகும் எரி நகரம் துயர் பெருகும். 46 கிறித்துவை வேண்டுதல் காப்பி ஏகம் மகிதலந் தனில் வந்த மனுவேலா - பெரு மாபாவிகளுக்கோர் அனுகூலா மறமதை வெறுத்தே திறமுடன் பொறுத்தீர் மலைமிசை திகழ்வரு மறுரூபா- மன மாயாதி கடந்த மகதேவா மரமுதல் இறந்தே பரமதில் சிறந்தீர் மகிமையில் வருமெழில் மணவாளா-என்றும் மாறாத தரும குணசீலா மகிழ்பரந் தருவீர் புகழ்பெருந் திருவீர். 47 கிறித்துவின் இரண்டாம் வருகை சந்தக் குழிப்பு தான தனன தன தனாதனாதன தான தனன தன தனாதனாதன தான தனன தன தனாதனாதன தனதான