பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கெத்செமனே என்ற தானம்
இருங் கானம்
பெரு மானும் - தனி
கீழேவிழுந்து தியானம்-சீடர்
கிஞ்சித்து மெண்ணாமல்
துஞ்சித்தங் கண்ணாரக்
கெட்ட தென்ன அவர் மதியே-மிகத்
தட்டவும் மன்னவன் விதியே

சாகரமென்ன விசாரம்
பவப் பாரம்
ஏசு சோரும் - அன்று
சாத்தானின் பேரதிகாரம் - அந்தச்
சங்கடம் நீங்கவே
தந்தையை வேண்டியே
சாய்ந்து துயில் சீடர் ஓரம்-வந்து
தட்டியெழுப்பினர் நேரம்

 

 26
யூதாஸ் காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை,
பேதுரு மறுதலித்தது.

பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு.

காவனந்தனில் ஏசுவின் புறம்
காதகன் யூதாஸ் வந்தான்-அவர்
கன்னத்தில் முத்தந் தந்தான்-பணக்
காரியத்தைப் புரிந்தான் - யூதர்
கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர்
காற்றா யோடிப் பறந்தார்

பேதுரு மிகவேக மாயுறை
பேர்த்த கூரிய ஈட்டி-உறப்
பிடித்த கையை முன் நீட்டிச் சினம்
பெருகவே மறங்கூட்டி - அங்கே
பேராசாரியன் வேலைக்காரனைப்
பேதித்தான் காதைத் தீட்டி