பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

 

28
பேதுரு மனங்கசந்தழுதது.
'தியானமே வரமைன' என்ற மெட்டு
தன்யாசி - ஆதி

பல்லவி

பாவிதான் பரமையன் பங்கே பாகமும் பருகாத் த்ரோகி (பா)

அனுபல்லவி


சேவல் கூவு முனமே மும்முறை தேவ
கோவை மறுத்தேன் கொடிதென் பாவக் குறமேவ (பா)

சரணம்


கரணமே வேகும் கசந்தழு மேகம்
கரை கொன்றது வெள்ளம் கரைந்தெவனாகும்
மருவுவென் ஏசு மாதவன் பாதம்
மன்னிப்புமாகும் மறவே னொருபோதும் (பா)

 

29
பொந்தியுப்பிலாத்தின் விசாரணை.

ஏசுவின் மரணாக்கினை.
 

'செந்தில்மா நகர்' என்ற மெட்டு.

 

பஞ்சபாதக மிஞ்சிய யூதரும்
பானு வெழுந்தபின் கூடி-ஏசு
வானவனைக் கொல்ல நாடி - மிகு
பந்தனத்தொடு பொந்தியுப் பிலாத்
தின்கரத்திடை கொண்டுவிட்டனர்.
பங்கமா மரணந்தனுக் காளான
பண்ணவன் தீர்ப்பினைக்கண்டு.-யூதாஸ்
பாதகனுந்துயர் கொண்டு