பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

முந்து நாளதில் வந்தவெண் காசுகள்
மூப்பரிடங்கொண்டு சென்று-திரு
மூர்த்தியைக் காட்டினே னென்று-அவர்
முன்பு தன்பிழை கூறி முப்பது
வெண்பணங்களை மீளவைத்திடு
முந்தியே யவர் எங்களுக் கேனென
முன்னவன் கோயி லெறிந்தான்-பின்பு
முடுகிப்போய் நான்று முடிந்தான்

அந்த மாபண முங்கறை மாவிலை
ஆகாது காணிக்கை யென்றே - உடன்
ஆசாரியர் நிலங் கொண்டார்- அங்கே
அன்னியப் பிணமடக்க வேளிடம்
இன்னு மப்புலம் இரத்த மாநிலம்
அன்றெரேமியா முந்துரை வாசகம்
ஆனது வே நிறைவேறி- உரை
வீணுறு மோதாசன் கூறி

புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப்
பூபதியோ வென்று கேட்டான்- அவர்
புகன்றபடி யென்னக் கேட்டான்- யூதர்
பொய்ப்பெருங் குறைகூறவே திரு
மெய்ப்பரன் பதில் மாறவேயிலை
புண்படாது வியத தேசாதிபன்
போற்றார் பொறாமையைக் கண்டான்-இரு
புரையரில் யார்க்கு வீடென்றான்

மன்று பீடம மர்ந்துள வேளையில்
மகிபன் பிலாத்துவின் தேவி - ஒரு
மனுஷனையே விரைந்தேவி - அந்த
மாதவத்தனை நீவருத்தலி
ராவிலத்தனை பாடுபட்டனென்
மண்டலாதிப கண்டுகொளே யென
மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள்- ஒரு
மழலைமொழிக் கிள்ளை யன்னாள்