பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

கிருபைக்கு மரனோடும் இருபக்க மிருசோரர்
கெழுமச் சிலுவையறை மேவினர்- வீரர்
குழுமிப்புரியு நீடு காவலர் - அங்கே
கேசகம்பித பாதசாரிகள்
கீழிறங்கும் கேசனேயெனில்
கிருதிற் கோயிலழித்த பின்றை நாள் மூன்றில்
நிருமிப் பாயுனைரட்சி யென்றனர்

அவரைப்போலவே யூத குரவப் பாரகமூதர்
இவனிப்போ திறங்குக நம்புவோம் இவன்
அயலுக்கே புரந்த வரம்பினான் - முனம்
ஆண்டவன் கரம் நம்பினானவர்.
வேண்டி லின் று மிரங்க வேயென
அருகிற் சிலுவையிடச் சோரனும் அந்த
வகையிற் பழிமொழியைக் கூறினன்

அறுமிக்க மணியாதி நவமுற்ற மணிகாறும்
அவனிக்கிருள் பரக்கத் தேவனை ஏசு
அகதிப்படவுரக்கக் கூவினர் - சிலர்
அகவினா னெலியாவை யென்னவோர்
மகன்றாவுறு காடி தன்னையே
அவருக்கொரு கழையில் நீட்டினன்-அவர்
அகவித் தமதுயிரை வீட்டினர்

வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள
மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய் - பெரு
மலைமிக்கே விளந்தன துன்பமாய் - பல
வால மாதவர் உயிர்த்தெழுந்தபின்
சால மாநகரிடைத் தெரிந்தனர்
மகிமைக் காரியமாகக் கண்டவர்-இவர்
அருமைத் தேவகுமாரன் என்றனர்